
சென்னை மாநகராட்சியின் நிழல் ஆணையர் மற்றும் தலைமைப் பொறியாளர் நந்தகுமார் 07.01.2021ல் தனது அலுவலகத்தில் 2021 புத்தாண்டை கொண்டாடினார். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆப்பிள், விலை உயர்ந்த டைரி என பரிசு பொருட்களை குவித்தார்கள். புத்தாண்டு கொண்டாடத்தில் நந்தகுமார் என்னை பற்றி தொடர்ந்து மக்கள்செய்திமையத்தில் செய்தி வெளிவருகிறது யார்..யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று எனக்கு தெரியும் என்று கனத்த குரலில் ஆவேசமாக பேசினார்.
சில நாட்களுக்கு முன்பு வளசரவாக்கம் செயற்பொறியாளரை நடுரோட்டில் நிற்கவைத்து, ஒருமையில் நீ தான் மக்கள்செய்திமையத்துக்கு செய்தி கொடுக்கிறாயா என்று நந்தகுமார் மிரட்டினார்..
சென்னை மாநகராட்சியின் மண்டலம் -5ன் செயற் பொறியாளர் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் டெங்கு கொசுப்பண்ணைகளை பார்வையிட்டார். டெங்கு கொசுவுக்கு நிறைய ஆர்டர் இருப்பதால், கொசு உற்பத்தியை அதிகரிக்கும்படி அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவிட்டார்.
டெங்கு கொசுப்பண்ணையை டிபன் சாப்பிட்டுக்கொண்டே பார்வையிட்ட போது, நாம் எடுத்த புகைப்படங்கள்.. இதோ..



சென்னை மாநகராட்சியின் மண்டலம் -5 செயற்பொறியாளர் சனிக்கிழமை கழுகு லாரன்ஸ் ஆலோசனை மூலம் சென்னை மாநகராட்சியின் 15மண்டலத்திலும் டெங்கு கொசுப்பண்ணை விரிவாக்கம் செய்யலாம் என்று தலைமைப் பொறியாளர் நந்தகுமாருக்கு மக்கள்செய்திமையம் பரிந்துரை செய்கிறது..